2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவு, கொட்டகலை, ரொசிட்டா பகுதியில், இன்றுக் காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலையிலிருந்து பத்தனைக்கு, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வானும் பத்தனையிலிருந்து கொட்டகலை கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளின் சாரதியே படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி வான், அவ்வீதி வழியாக பயணித்த லொறியொன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வான், லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுச் சென்ற பொலிஸார், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X