2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பெண் பலி; ஏழு பேர் படுகாயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை்-மரகல மலைக் காட்டிலிருந்து நெரம்பிமவுக்கு, சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கெப்ரக வாகனமொன்று, மலையிலிருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் எழுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது பெண்ணொருவரே படுகாயமடைந்துள்ளார்.

தம்பகல்ல, லுணுகம்வெஹெர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே படுகாயமடைந்த நிலையில், மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பில், மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .