Editorial / 2018 ஜூன் 01 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
நன்நீர் மீன்பிடித் தொழிலாளர்கள், தொழிற்றுறையில் ஈடுபடும்போது, அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ளக்கூடிய அவசர நடவடிக்கைத் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு, காசல்ரீ சனசமூக நிலையத்தில், இன்று (1) நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட அனர்த்த முகமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு இடம்பெற்றது.
இதன்போது, நன்நீர் மீன்பிடிப்பாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
இச்செயலமர்வில், நுவரெலிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவத் திணைக்கள அதிகாரி பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago