Freelancer / 2022 மார்ச் 23 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது பல்வேறு துறைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடுபர்களுக்கு உரம் மற்றும் மருந்துகள் கிடைக்காததன் காரணமாக விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.
நாட்டுக்கு தேவையான மரக்கறிகளில் பெரும்பாலான பகுதியினை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளே வழங்கி வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள உரம் மற்றும் விவசாயத்திற்குரிய மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக பல விவசாயக் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு உரம் மற்றும் மருந்து வகைகள் உரிய நேரத்தில் கிடைக்காததன் காரணமாக அதிக விலை கொடுத்து இவற்றினை பெற வேண்டியிருப்பதனாலும் இவர்கள் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஒரு சில கடைகளில் ஒரு மூட்டை உரம் 13 ஆயிரம் தொடக்கம் 18 வரை விற்கப்படுவதனால் தங்களுக்கு தேவையான உரத்தினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும்,அதிக விலை கொடுத்து உரத்தினை மருந்தினையும் வாங்கி உற்பத்தியில் ஈடுபட்டாலும் அவற்றினை நட்டத்திலேயே கொடுக்க வேண்டி ஏற்படுவதனால் எதிர்காலத்தில் விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருந்து மற்றும் உரம் இல்லாததன் காரணமாக பீடைகளின் தாக்கங்களும் அதிகரித்துள்ளன. இதனால் உள்ள பயிர்களும் விணாகும் நிலை உருவாகியுள்ளன.
விவசாய நிலங்கள் தற்போது இரசாய உரத்திற்கு பழகியிருப்பதனால் அதனை உடனடியாக இயற்கை உரத்தினால் சீர் செய்ய முடியாது. இயற்கை உரத்தினை பயன்படுத்தினாலும் போதியளவு விளைச்சளை பெற முடியாத நிலையே காணப்படுகின்றன.
அத்தோடு போதியளவு இயற்கை உரத்தினை செய்து கொள்ளவோ பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலையில் நாங்கள் எவ்வாறு இந்த தொழிலினை கொண்டு நடத்துவது என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்?
எனவே இதற்குரிய உரிய தீர்வினை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (R)

59 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
18 Jan 2026