R.Maheshwary / 2023 ஜனவரி 09 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ( Senior Superintendent of Police) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
350 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 350 கஞ்சா செடிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன், நவீன உலோக ஸ்கேனர் இயந்திரமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை மொனராகலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
21 minute ago
46 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago
21 Mar 2026