Sudharshini / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மண்சரிவு அபாயம் காரணமாக ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் ஆரம்ப பிரிவு நாளை (06) மூடப்படும் என கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.
நேற்று (05) பெய்த கன மழை காரணமாக ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் ஆரம்பப் பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை தொடர்ந்து பெய்யுமானால் ஆரம்பப் பிரிவுக்குப் பின்பகுதியிலுள்ள வங்கி சரிந்து விழும் அபாயம் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென
கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .