2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஹட்டனில் தேசிய தீபாவளி விழா

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன் மாணிக்க பிள்ளையார்  கோயிலை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழாவை அக்டோபர் 20 ஆம் திகதி  நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் திங்கட்கிழமை (15) அன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர்  டபிள்யூ.பி. சேனாதீர தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழாவை மாணிக்கப்பிள்ளையார் கோயில் மற்றும் ஹட்டன் நகரத்தை மையமாகக் கொண்டு பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

நுவரெலியா பிராந்திய புத்தசாசன  மண்டலத்தின் பதிவாளர், வணக்கத்திற்குரிய கிரியோருவே தீரானந்த தேரர், மகா சங்கத்தினர் மற்றும் இந்து குருக்கள் குழுவினர்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.என்.குமாரி, இந்து அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.அனிருத்தன், மேலதிக மாவட்ட செயலாளர்கள், நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு படைத் தலைவர்கள், இலங்கை போக்குவரத்து சபை டிப்போ முகாமையாளர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலரும்  கலந்து கொண்டனர்.

பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X