Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹட்டன் தனியார் பஸ் விபத்து சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) மீண்டும் முன்னிலைப்படுத்திய போது, சந்தேகத்திற்குரிய சாரதியை 2025 ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் எம்.பாரூக்தீன் உத்தரவிட்டார்.
விபத்து தொடர்பில் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகனப் பரிசோதகரும் ஹட்டன் பொலிஸாரும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (26) விளக்கங்களை முன்வைத்து சந்தேக நபரின் விளக்கமறியலை நீடிக்குமாறு நீதவானிடம் கோரினர்.
ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த விளக்கங்களை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேக நபரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
நாவலப்பிட்டி, நவ திஸ்பனையில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய பிரஷசன்ன பண்டாரவின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி கடந்த 21ஆம் திகதி பயணித்த தனியார் பேருந்து, ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி 25 அடி பள்ளத்தில் பாய்ந்து தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூவர் மரணமடைந்தனர். 51 பேர் காயமடைந்து, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எட்டுப்பேர், கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
1 hours ago