Editorial / 2025 மார்ச் 27 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை-ரத்னபுர சாலையில் இங்கிரிய மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் சிறிய லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த லாரி சாரதியின் உதவியாளர் உட்பட பல பாடசாலை மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
7 minute ago
25 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
42 minute ago
1 hours ago