2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல தயாரான 6 பேர் கைது

Super User   / 2012 ஒக்டோபர் 01 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே. என்.முனாஷா)

சட்டவிரோதமான முறையில் படகு மூலமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு தயாரான ஆறு பேர் நீர்கொழும்பு பொலிஸாரினால் இன்று அதிகாலை தலாஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, கோப்பாய் மற்றும் பரந்தன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்இ இவர்களை இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சட்டவிரோதமாக செல்ல பயன்படுத்தப்பட்ட படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்களை பொலிஸார் இன்று நீதிமன்றில்  ஆஜர் செய்தபோது, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X