2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 62ஆவது பொது கூட்டம் கொழும்பில்

Super User   / 2012 ஜூன் 18 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 62ஆவது வருடாந்த பொது கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு-10 டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

பேரவையின் தேசிய தலைவர் சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அளகப்பெரும கலந்துகொள்ளவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டாக்டர் பிர்தோஸி ரஸ்தொம் மெஹ்ட்டா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
இந்த ஆண்டின் 'வை - ஆளுமை விருது' சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பவுஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான மற்றும் பேராசிரியர் எம்.ரீ.ஏ.புர்கான் ஆகிய மூவருக்கு வழங்கப்படவுள்ளது என பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் ஏ.பைஸல் ஜிப்ரி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .