2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விபசாரத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்டப 11 பேர் கைது

Super User   / 2012 ஜூன் 05 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

விபசாரத்தில் ஈடுபட்ட 9 பெண்களையும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு ஆண்களையும் நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்து இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள விடுதிகள் இரண்டில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு விடுதியில் 4 பெண்களும் ஒரு ஆணும் மற்றொரு விடுதியில் 5 பெண்களும் ஆண் ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இரண்டு ஆண்களும் குறித்த விபசார நிலையங்களின் முகாமையாளர்களாவர். இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள ஆண்களும் இருவரும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்ரா யு ஜயசூரிய தலா 50,000 ரூபா அபராதமும் 10 வருட காலம் ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத கால சிறை தண்டனையும் விதித்தார். கைது செய்யப்பட்ட பெண்கள் 9 பேரும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதையடுத்து நீதவான், தலா 100 ரூபா அபராதமாக விதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .