2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இரவு 10 மணிவரை நீர்விநியோகத் துண்டிப்பு

Super User   / 2011 மே 07 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனாநாயக்க)


களத்துவெவ - தெஹிவளை நீர்விநியோகக் குழாயில் மஹகரமையில் ஏற்பட்ட பழுதினால் கொழும்பு பன்னிபிட்டிய மற்றும் அதன் அயல்புறங்களில் உள்ள நீர்விநியோகத் துண்டிப்பு நிலை இன்று இரவு 10 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை டெய்லி மிரருக்குத்தெரிவித்துள்ளது.


வெள்ளிக்கிழமை இரவு 9 மணியிலிருந்து இன்று மாலை 5 மணிவரை நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் இரவு 10 மணிவரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிபிட்டிய, ருக்மல்கம, மெத்தேகொட, கெஸ்பாவ மற்றும் பிலியந்தலையிலிருந்து பொரலஸ்கமுவை வரை வீதிகள் அனைத்திலும் இந்நீர்விநியோகத் துண்டிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .