2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல உதவிய, செல்ல முயன்ற 10 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றதாகக் கூறப்படும் 6 பேரும் இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்றதாகக் கூறப்படும் 4 பேரும் நீர்கொழும்பு, ஏத்துக்கால பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

நீர்கொழும்பு, ஏத்துக்கால பகுதி கடல் வழியாக அவுஸ்திரேலியா  செல்வதற்காக ஏத்துக்கால பிரதேசத்திலுள்ள ஓய்வுவிடுதியொன்றில் இவர்கள் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டதாக நீர்கொழும்பு ஏத்துக்கால சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

ஏத்துக்கால சுற்றுலா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், சாவகச்சேரி,  நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் நீர்கொழும்பு, ஏத்துக்கால பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .