2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விவாகரத்தின்றி 2 ஆவது திருமணம் செய்த பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

Super User   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                              (லக்மால் சூரியகொட)

இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்னனர் முதல் கணவரை விவகாரத்து செய்யத் தவறிய குற்றச்சாட்டில் 19 வயது யுவதியொருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கொழும்பு கொம்பனித்தெருவை சேர்ந்த இந்த யுவதிக்கு எதிராக முதல் கணவரின் தாயார் கொழும்பு குற்றத்தடுப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார். தனது மகன் வெளிநாட்டில் இருக்கும்போது இப்பெண் மற்றொரு நபரை திருமணம் செய்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

தண்டனை சட்டக்கோவையின் 362 (பி) பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றை சந்தேக நபர் புரிந்துள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இக்குற்றச்சாட்டை அப்பெண் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையும் 1500 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .