2025 ஜூன் 21, சனிக்கிழமை

ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியல்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை மற்றும்  வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவை எதிர்வரும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள பிணை கோரிக்கை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்பட்ட போதே  சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்    உத்தரவிட்டார்.

விஜித்த பெர்னாந்துவின் சார்பில் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவும், முறைப்பாட்டாளர்; சார்பில்  அரச  சட்டத்தரணி சிஹான் டி சில்வாவும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரான தரிந்து கொஸ்தாவுக்கு பொலிஸார் பிணை வழங்கியுள்ளதாகவும், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் பிரதிவாதியான விஜித்த பெர்னாந்துவின் சார்பில்  ஆஜரான சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டார்.

தரிந்து கொஸ்தா  வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் நால்வரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதற்கு சாட்சிகள் உள்ளதாகவும் சந்தேக நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்களும், சாட்சியின் வாக்கு மூலமும் பொருந்துகிறது எனவும்  குறிப்பிட்ட அரச சட்டத்தரணி சிஹான் டி சில்வா,  விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

எத்தகைய சாட்சிகள் இருப்பினும் அது  சந்தேக நபர் ஒருவருக்கு பிணை வழங்க தடையாக இருக்க முடியாது என்று சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் குறிப்பிட்டார்.

இரு தரப்பு சட்டத்தரணிகளினதும் வாதப் பிரதிவாதங்களின் பிறகு,  இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நீதவான் ஒத்தி வைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .