2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ரூ. 5 இலட்சம் பெறுமதியான கசிப்புடன் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 20 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

தாகொன்ன பிரதேசத்தில் சட்ட விரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன்; 5 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைபற்றியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்க வங்கியொன்றுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத கட்டிடமொன்றின் மறைவிடத்தில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பு நிலையம் இயங்கி வந்துள்ளது.

34560 டிரேம் சோடா, 35 ஸ்பரிட் போத்தல்கள், பரல்கள், கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பரிசோதகர் பிரியநாத் குமார தெரிவித்தார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அலவ்வவின் ஆலோசனையின்படி போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .