2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஓகஸ்டில் கடலுக்கு சென்ற 5 மீனவர்கள் குறித்து தகவல் இல்லை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம். மும்தாஜ், ஜூட் சமந்த, அப்துல்லாஹ்)

நீர்கொழும்பு மீனவத் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் இல்லை என அம்மீனவர்களின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். வண்ணாத்திவில்லு சேரக்குளி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களே இவ்வாறு ஆழ்கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்று காணாமல் போயுள்ளனர்.

இந்த மீனவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வண்ணாத்திவில்லு பிரதேசத்திலிருந்து புறப்பட்டு நீர்கொழும்பு மீனவத் துறைமுகத்தினூடாக 30ஆம் திகதி ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். 15 நாட்களில் திரும்பி வருவதாகக் கூறியே அவர்கள் புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த மீனவப் படகில் 15 நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருட்கள் மாத்திரமே இருந்துள்ளதாகவும் சிறியரக மீனவ படகிலேயே அவர்கள் ஆழ்கடலுக்குள் சென்றுள்ளமையினால் அதிக நாட்கள் அப்படகு கடலில் தரித்திருக்க முடியாது எனவும் கூறப்படுகின்றது.

எனினும் ஆழ்கடலுக்குச் சென்ற இந்தபடகு சில தினங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்கு திரும்பிய பின்னர் இயந்திரக் கோளாரை சரி செய்து கொண்டு மீண்டும் கடலுக்குத் திரும்பிய பின்னர் அப்படகில் இருந்தவர்கள் தொடர்பிலோ அப்படகு தொடர்பிலோ இதுவரை எதுவிதத் தகவல்களையும் பெறமுடியவில்லை என அம்மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வண்ணாத்திவில்லு சேரக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த ஜே. ஏ. நிமல் (வயது 42), ஜே. ஏ. சுரேன் (வயது 31),  எஸ்.டப்ளிவ். சண்முகராஜா, பிரதீப் சுசன்ன (வயது 23) மற்றும் குறித்த மீனவப் படகின் செலுத்துனர் ஆகியோரே இவ்வாறு ஆழ்கடலுக்குச் சென்றவர்களாவர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .