2025 ஜூன் 23, திங்கட்கிழமை

களப்பு பகுதியில் சட்விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது

Super User   / 2012 ஜூலை 29 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


சீதுவை, கிம்புலாபொக்க களப்பு பகுதியில் சட்விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆறு சந்தேக நபர்களுடன் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானத்தையும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் நேற்று சனிக்கிழமை கைப்பறியுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தை சேர்ந்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

540 மதுபான ஸ்பிரிட் போத்தல்கள், 60 கோடா பெரல்கள், படகு ஒன்று, படகு இன்ஜின் ஒன்று  உட்பட மேலும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் களப்பு பகுதியில் இரண்டு தினங்கள் தங்கியிருந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

சீதுவை, கதிகொட – கிம்புலாபொக்க களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரிக்கப்படுவதாக நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பதிக்கு கிடைத்த தனிப்பட்ட தகவல் ஒன்றினை அடுத்து குற்றத்தடுப்புப பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரீட்சகர் அமித் ராஜரத்ன தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .