2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 62 பேர் பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (கே.என்.முனாஷா )

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 62 பேரை தலா ஒவ்வொருவரையும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க இன்று அனுமதியளித்தார்.

அத்துடன், பிணை வழங்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டுக்களை  நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, இவர்களை சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு  அழைத்துச் செல்ல உதவியதாகக் கூறப்படும் 7 பேரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்த 69 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X