2025 ஜூன் 23, திங்கட்கிழமை

படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 69 பேர் கைது

Super User   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 69 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

'ஆஷா துவ' எனும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று,  நீர்கொழும்புக்கு அருகில் வைத்து கடற்படையின் அதிவேக படகுகளினால்; தடுக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது இவர்கள் கைது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 தமிழர்கள் 19 சிங்களவர்கள் 2 முஸ்லிம்கள் அடங்குகின்றனர். நீர்கொழும்பு, புல்மோட்டை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், விஸ்வமடு, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள என அறிவிக்கப்பட்டுள்ளது. முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்ட இவர்கள், குற்றப்புலனாய்வுப் பணியகத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  (சுபுன் டயஸ்)






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .