2025 ஜூன் 23, திங்கட்கிழமை

149 போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை அச்சடித்த நால்வரை இன்று கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

கிம்புலாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர். இவர்களுடன் 149 போலி ஆயிரம் ரூபா நோட்டுக்களையும் போலி  நோட்டுக்களை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட மடிகணினி, ஸ்கேனர், பிரின்டர் ஆகியவற்றையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நபரிடமிருந்து போலி நோட்டுக்களை அச்சடிக்கத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு ஆரம்பத்தில் இரண்டு இலட்சம் ரூபா பணத்தைப்பெற்று போலி நோட்டுக்கள் அச்சடிக்கும் சட்டவிரோத செயல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

போலி அயிரம் ரூபா நாணயத்தாள்களை, பட்டாசு வியாபாரிகள் மூலம் கிளிநொச்சி பிரதேசத்தில் மாற்ற சந்தேக நபர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதாகவும் ஏனைய இடங்களில் நாணயத்தாள்கள் சில மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பதியின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .