2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கம்பஹா மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 02 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.எம்.பௌஸான்)

அரசாங்க தகவல் திணைக்களம் தேசிய வழிகாட்டல் தொலைக்கல்வி நிறுவனம், உயர்கல்வி அமைச்சு, தகவல் ஊடக அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச ஊடகவியளாலர்களுக்கான தகவல் தொழிநுட்பம் தொடர்பான பயிற்சிநெறி; கம்பஹா மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கம்பஹா மிரிஸ்வத்த இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்பயிற்சிநெறியில்,  தெரிவு செய்யப்பட்ட 20 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
 
இப்பயிற்சிநெறியானது நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 20 நிலையங்களில் நடைபெற்றதுடன், முதல் கட்டமாக அரசாங்க தகவல் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 500 பிரதேச ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .