2025 ஜூன் 26, வியாழக்கிழமை

எதிர்கட்சியின் தீப்பந்த பேரணியில் குண்டர்களின் தடியடி

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 04 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று மாலை புஞ்சிபொறளையில் பிரதான எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தீப்பந்த பேரணியில் குண்டர்கள் தடியடி பிரயோகம் செய்ததில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி, புஞ்சிபொறளை சந்தியிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைவரை தீப்பந்த பேரணியொன்றினை எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இந்த பேரணி ஆரம்பமாகிய சிறிது நேரத்தில் பேரணிக்குள் புகுந்த குண்டர்கள் தடியடி பிரயோகத்தினை மேற்கொண்டனர். இத்தாக்குதலினால் பேரணியில் கலந்துகொண்ட பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரணியில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் சிலரும் இத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலரது ஒளிப்பதிவு கருவிகளும் சுக்குநூறாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல் தொடர்பாக ஐ.தே.கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில்... ''காலையில் கதிர்காமத்தில் நாட்டு மக்களின் சுதந்திர தினக் கொண்டாட்டம் நிகழ்ந்தது. மாலையில் குண்டர்களின் 'சுதந்திர கொண்டாட்டம்' புஞ்சிபொறளையில் இடம்பெற்றுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Pix: Samantha Perera


You May Also Like

  Comments - 0

  • Nakeel Saturday, 05 February 2011 02:02 PM

    இது ஒரு நாடா அல்லது ஒரு காட்டு சட்டம் நடக்கும் இடமா. ஜனநயகம், சுதந்திரம், மனித உரிமை, பேச்சு உரிமை பேசுற காலத்தில என்ன நடக்கிறது இங்கே? ஏன் இதை தடுக்க வழி இல்லையா?

    Reply : 0       0

    ameer Saturday, 05 February 2011 07:15 PM

    இது ஜனநாயகம் ......

    Reply : 0       0

    xlntgson Wednesday, 09 February 2011 09:21 PM

    போராட்டம், ஊர்வலம் எல்லாம் சிறையை நோக்கி எதற்கு?
    அனுராதபுரத்தில் என்ன நடந்தது தெரியும் தானே!
    ஜனநாயகத்துக்குத் தான் ஜனநாயகம் தெரியும், அராஜகத்துக்கு?
    யார் யாரை குறை சொல்ல?
    வாய்ப்பிருந்தால் சிறையை உடைத்து பொன்சேகாவை மீட்க பலாத்காரமாக முயன்றிருப்பர் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை!
    இரகசிய கேமராக்களுக்குப் புண்ணியம்!
    பொன்சேகாவை, அவரது உயிரை மதிக்கிறவர்கள் செய்யும் வேலையா இது?
    ஒவ்வொரு நாட்டில் நடக்கும் அநியாயங்களை பார்த்தால் இங்கு நடப்பது ஜுஜுபி!
    எதிர்க்கட்சித் தலைவர்கள் மாயமாக மறைந்து விடுகின்றனர்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .