Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2011 மே 02 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை முஸ்லிம்கள் சார்பாக கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் ஒரு சமூகத்திற்கு எதிரானதல்ல. அது பயங்கரவாத்திற்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.
'கடந்த 30 வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக பௌத்த, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழும் சந்தர்ப்பத்தில் அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை அமைந்து விட கூடாது' என அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் தேவையற்ற இன முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கவும் நாட்டை கட்டியொழுப்பவும் முன்வர வேண்டும் என அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை வைத்து இலங்கைக்கு எடுக்கும் நடவடிக்கைகளை மீள் பரிசீலனை செய்யும்படி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மற்றும் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் கையொப்பமிட்டு கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங் கீ மூனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
NIRANJAN RATNARAJAHANJAN Tuesday, 03 May 2011 04:24 AM
THIS IS COMADY MEETING
Reply : 0 0
Rajani Tuesday, 03 May 2011 07:21 PM
we are in the mercy of the government. Whatever the government say, we will tell others. If we are in Tamil Nadu, our statement will be different.
Reply : 0 0
Lankan Tuesday, 03 May 2011 07:44 PM
Everything comody not only this meeting but also what happen in Sri Lanka past 30 years between government and LTTE, just lost civilians life only from the past war. All of us should pray allah to every one should live peacefully in Sri Lanka dont make separate relegion wise or area wise WE ARE SRI LANKAN.
Reply : 0 0
jaliyath Thursday, 05 May 2011 01:15 AM
உண்மையில் இது ஒரு நல்ல முயற்சி .நம் நாட்டில் இருந்த பயங்கரவாத்தை ஒழித்த மகிந்தவுக்கு நமது பாராட்டும் ஆசிர்வாதமும் என்றும் உண்டு. வடக்கில் இருந்த நமது உறவுகளை ஒரே நாளில் விரட்டிய பயங்கரவாதி பிரபாகரன் ஒழிந்த நாள் தான் நாம் நிம்மதியாக நம் தாய் நாட்டில் வாழ்கிறோம்.
Reply : 0 0
Najeem Thursday, 05 May 2011 11:30 AM
எது விகடமானது என்று தெரியவில்லை, சிலர் தங்களது தாய் நாட்டுப் பற்று, அரச விசுவாசம் அல்லது அழுத்தம் காரணமாக இப்படியான அறிக்கைகளை விட முடியும். தனியொருவன் அல்லது ஒரு சமூகம் முன்னெடுத்தால் பயங்கரவாதம், அதுவே அரசுகள் செய்யும் போது தர்ம யுத்தம். உ+ம்ம் - பலஷ்தீன் , போஸ்னியா, காஷ்மீர், இராக் என்று நீளும். இந்தப் பிரச்சினைகளுக்கான காரணிகள் தொடர்கின்றனவே, அவற்றினைத் தீர்ப்பதற்கான அழுத்தத்தையும் உலமாக்கள் பிரயோகித்தால் என்ன?
Reply : 0 0
mohamed Thursday, 05 May 2011 10:17 PM
மக்கள் நிம்மதியட்ட்று வாழ்ந்த இந்த நாட்டில் பயங்கரவாத யுத்த நிறுத்தத்தின் பின் ஐக்கியத்தையும் அமைதியையும் காணலாம். அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் திரும்பவும் பிரச்சினையை உண்டுபண்ண இனக் கலவரத்தை உண்டுபண்ண விசாரணை என்ற பெயரில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணானவையே
Reply : 0 0
Abu Abdullah-Japan Wednesday, 11 May 2011 03:27 PM
வண் கீன் மூனுக்கு , மூட்டில் பலனில்லை ,சிறிய இந்த இலங்கை மண்ணையும் ஒரு கை பார்த்து விடலாம் என நினைக்கிறார் ,பாவம் இந்த வா கீ மூ ,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
4 hours ago