Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2011 ஜூன் 25 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தமிழர்களுக்கும், ஏனைய இனத்தவர்களைபோல தமது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்வதற்கு உரிமை இருக்கின்றது. தற்போது கொழும்பிலே நிரந்தரமாக வாழ்கின்ற மலையக மாவட்டங்களை சார்ந்த இளைஞர்களுக்கும், கொழும்பின் தொடர்மாடி குடியிருப்புகளிலே வாழ்கின்ற தமிழர்களுக்கும் இந்த உரிமை கணிசமாக மறுக்கப்படுகிறது. இதுதொடர்பில் புதிய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூடிய கவனம் செலுத்தவேண்டும். இதற்கு உரிய ஒத்துழைப்புகளை ஜனநாயக மக்கள் முன்னணி வழங்கும்.
- இவ்வாறு பவ்;ரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட தேர்தல் செயலக அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு ரேணுகா விருந்தகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மலையகத்திலிருந்து கொழும்பிற்கு வந்து வர்த்தக நிலையங்களில் தொழில் செய்துகொண்டும், சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டும் நீண்டகாலமாக தமிழ் இளைஞர்கள் வாழ்கின்;றார்கள். தங்களது பெற்றோர் மலையகத்தில் வாழ்கின்ற நிலையில் இவர்கள் கொழும்பை நிரந்தர வதிவிடமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு இன்று கொழும்பிலும் வாக்குரிமை இல்லை, மலையகத்திலும் வாக்குரிமை இல்லை. கொழும்பில் இவர்களுக்கு நிரந்தர வதிவிடம் இல்லை என்ற காரணத்தை காட்டியும், மலையகத்தில் இவர்கள் வாழ்வதில்லை என்ற காரணத்தை காட்டியும் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
அதையடுத்து கொழும்பு, தெஹிவளை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற கணிசமான தமிழர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் இடம்பெறுவதில்லை. கொழும்பை நிரந்தர வதிவிடமாக ஏற்றுக்கொண்டுவிட்ட இவர்களுக்கு வாக்காளர் பதிவில் இடமளிப்பது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பாகும்.
மேலும், முதல் வருடத்து வாக்காளர் இடாப்பில் இடம்பெறும் தமிழர்களின் பெயர்கள் அடுத்த வருடத்தின் வாக்காளர் இடாப்பில் இடம்பெறுவது கிடையாது. ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்திலுள்ள வாக்காளர்களில் ஒரு சிலரின் பெயர்கள் மாத்திரம் நீக்கப்படுகின்றன. இவை கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்கள் எதிர்நோக்கும் நிரந்தரமான பிரச்சனைகளாகும்.
அதேவேளையில் தம்மை வாக்காளராக பதிவு செய்துகொள்வதில், தொடர்மாடிகளில் குடியிருக்கின்ற தமிழர்களுக்கு இருக்கின்ற அசிரத்தையையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன். கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் பதிவு செய்வது தொடர்பில் தேவையில்லாத குழப்பம் நிலவுகின்றது. அதேபோல் சில வீடுகளின் உரிமையாளர்கள் தமது குடியிருப்பாளர்களின் பெயர்களை வேண்டுமென்றே பதிவு செய்வதில்லை. உரிமையாளர்களின் இத்தகைய செயற்பாடு தேர்தல் சட்டத்தையும், சாதாரண குற்றவியல் சட்டத்தையும் மீறும் தண்டனைக்குரிய குற்றம் என்பதை தேர்தல் ஆணையாளர் அறிவிக்கவேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago