2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

ஒருவழி வாகனப் போக்குவரத்து சோதனை வெற்றியளிக்கவில்லை

Super User   / 2011 ஜூன் 26 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பம்பலப்பிட்டி முதல் கொள்ளுப்பிட்டி வரையும் மற்றும் கொள்ளுபிட்டியிலிருந்து டிக்மன்ஸ் வீதி வரையும் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒரு வழி வாகனப் போக்குவரத்து சோதனை வெற்றியளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின்படி, கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் டுப்ளிகேசன் வழியாகச் சென்று டிக்மன்ஸ் வீதியில் திரும்பி பின்னர் காலி வீதிக்குத் திரும்புமாறு பணிக்கப்பட்டிருந்தது. நேற்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவi இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வார நாட்களிலும் சனிக்கிழமைகளிலும் போக்குவரத்து நெசரிலைக் குறைப்பதற்காக இந்த ஒரு வழி வாகனப் போக்குவரத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் வீதியில் வழமைபோல் வாகன நெரிசல் காணப்பட்டன. (SD)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X