2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கலாநிதி சுக்ரியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்பணம்

Super User   / 2011 ஜூலை 08 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜாமீயா நளீமீயா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்பண நிகழ்வு கடந்த புதன்கிழமை தபால் திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜாமீயா நளீமீயா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மட், எம்.எப்.சீ.டி. நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சிறாஜ் மசூர் உட்பட பலர் உரையாற்றினர்.

இதன்போது கலாநிதி சுக்ரியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை நீதியரசர் சலீம் மர்சூப் அங்குரார்பணம் செய்துவைத்தார்.


You May Also Like

  Comments - 0

  • Mohamed Afraj Sunday, 10 July 2011 05:10 PM

    முஸ்லிம்களுக்கு என்று ஒரு இணைய தளம் கட்டாயம் தேவைதான் இதில் வரும் பல நல்ல விடயங்களை நானும் தெரிந்து என்னுடைய வாழ்வில் எடுத்து நடக்க முயற்சிக்குறேன் இது மேலும் வளர எல்லாம் வல்ல இறையவன் அருள் புரிவானாக ஆமீன்..................!

    Reply : 0       0

    irshad Monday, 11 July 2011 08:46 PM

    மிகவும் நல்லது. முக்கியமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு ஒரு குரல் வேண்டும். பூமியில் எந்த மூலையில் எமது மக்கள் பிரச்சினைகள் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

    Reply : 0       0

    Mohammed Rafi Tuesday, 12 July 2011 08:27 PM

    இதுபோன்ற நல்ல முயற்சிகள் மென்மேலும் வளர அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். அறிவுபூர்வமான பல ஆக்கங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் இன்ஷா அல்லா

    Reply : 0       0

    xlntgson Friday, 15 July 2011 09:26 PM

    எனது கருத்துகளுக்கு போதுமான பதில்கள் இல்லை; கிடைக்கும் என்றால் நான் கூட ஒரு தனி இணையதளம் அமைப்பேன்...நிச்சயமாக அமைப்பேனாக்கும்... க்கும்...க்கும் ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .