2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவு எம்மிடத்தில் பெரும் வெற்றிடத்தினை விட்டுச்சென்றுள்ளது : செல்வம் எம்

Kogilavani   / 2011 ஜூலை 09 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
உலகம் முழுவதுமுள்ள அனைத்து தமிழ் மக்களினாலும் மட்டுமல்ல ஏனைய சமூகங்களைச்சேர்ந்த புலமை சார் ஆய்வாளர்கள், அறிஞர்கள், கல்வி மான்கள் ஆகியோரால் மிகவும் நேசிக்கப்பட்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவு தமிழ் பேசும் நல்லுலகத்தைச்சார்ந்த அணைவருக்கும் மிகப்பெரும் பேரிழப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவு தொடர்பாக அவர் விடுத்துள்ள அனுதாப செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இளம் வயதிலிருந்தே இடது சாரிச் சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்ட அவர் அச் சிந்தனை தொடர்பான பல்வேறு கருத்துக்களைத் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்த மிகப் பெரும் ஆளுமைத்திறன் கொண்ட ஒருவராவார்.

அது மட்டுமின்றி ஜனநாயக ரீதியாக அஹிம்சை போராட்டம் அதற்கு பின்னரான ஆயுதப்போராட்டம் என்பன தொடர்பிலும் துணிச்சலாக கருத்துக்களை வெளிக்கொண்டு வந்து,  ஈழத் தமிழர் போராட்டத்திற்கு தனது கருத்தியல் பங்களிப்பை வழங்கியவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம், அதன் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கும் மொழியின் ஆய்வுத்துறைக்கும் தனது வாழ் நாளின் பெரும் பகுதியை அர்ப்பணிப்புடன் தன்னலம் கருதாது ஈடுபடுத்தி வந்த பேராசிரியர் காத்திகேசு சிவத்தம்பியின் மறைவு எம்மிடத்தில் பெரும் வெற்றிடத்தினை விட்டுச்சென்றுள்ளது என தனது அனுதாபச் செய்தியில் செல்வம் அடைக்லநாதன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .