2025 ஜூன் 25, புதன்கிழமை

புனித ரமழானை முன்னிட்டு 'உணவு வங்கி திட்டம்'

Super User   / 2011 ஜூலை 30 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புனித ரமழானை முன்னிட்டு அரச சார்பற்ற நிறுவனமான முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா 'உணவு வங்கி' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வீடுகளில் எஞ்சும் உணவுப் பொருட்களை முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா சேகரித்து கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பட்டிணியால் வாழும் ஏழை குடும்பங்கள் மற்றும் சிறார்களுக்கு வழங்கவுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக உணவு வீண்விரயத்தை தடுக்க முடியும் என முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா எதிர்பார்க்கின்றது.

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் உணவு வங்கி பம்பலப்பிட்டி நிமல் வீதியிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசலிற்கு முன்னாள் அமைக்கப்படவுள்ளது.

இந்த உணவு வங்கி புனித ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் மாலை 7 மணி முதல் (மஹ்ரிப் தொழுகையின் பின்னர்) இரவு 10.30 மணி வரை (தராவீஹ் தொழுகை) செயற்படும்.

இக்காலப் பகுதியில் சமூக நிகழ்வுகள், திருமண வைபவங்கள், பிறந்த நாள் வைபவங்கள் மற்றும் இப்தார் நிகழ்வுகளிலுள்ள மேலதிக உணவு பொருட்களையும் உணவு வங்கிக்கு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் உணவு வங்கியினால் சேகரிக்கப்படும் பொருட்கள் பொதிகளில் அடைக்கப்பட்டு ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவுகளிலும்  கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0112815024 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 219 நாவல வீதி நுகேகொடையிலுள்ள முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தையோ தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 30 July 2011 08:53 PM

    திட்டம் நன்றாக இருக்கிறது, நடைமுறை சிக்கல் ஏதும் நிகழ்ந்து இடைநடுவில் நின்று விடாமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    Reply : 0       0

    xlntgson Saturday, 30 July 2011 09:45 PM

    meenavan சமைத்து நான்கு மணி நேரத்துக்குள் உண்ண வேண்டும் என்று கொழும்பு மாநகர சபை எச்சரித்திருப்பதை கவனியுங்கள். முதல் நாள் அல்லது இரவில் சமைத்த உணவை அதிகாலையில் நாங்கள் உண்ணுகின்றோம் 'சகருக்காக'-இந்த நிலையில் இதனை சேகரித்து விநியோகிப்பதில் நீங்கள் கூறும் சிக்கல்களை நானும் உணர்கின்றேன் மேலும் மிஞ்சிய உணவென்னும் போது balanceddiet சமச் சீர் உணவாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே! நோன்பு திறந்த பின் மிஞ்சுவதை ஒதுக்கவோ அளிக்கவோ நேரமில்லை. உடன் தொழுகைக்கு போகவேண்டும்; அவை சிறு தின் பண்டங்கலாதலால் கெடாது!

    Reply : 0       0

    sabry Saturday, 30 July 2011 10:57 PM

    நல்ல விடயம். வாழ்த்துக்கள் சிறந்த முறையில் முன்னெடுக்க அல்லாஹ் உதவி புரிவானாக.

    Reply : 0       0

    nawas mohammed Saturday, 30 July 2011 11:35 PM

    இந்த திட்டம் சிறப்பாக அமைய வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

    Reply : 0       0

    Ishaq Saturday, 30 July 2011 11:40 PM

    வரவேற்கத்தக்கது,,,,
    மிஞ்சும் உணவு என்னும் போது, சாப்பிட்டதின் மீதி என்றும் மட்டும் பொருள் அல்ல, சாப்பிட எடுத்து வந்து சாப்பிடாமல் மிஞ்சியது என்றும் பொருள்படும், வீண் விரயம் குறைக்கப்படும்...
    புனித ரமழான் வாழ்த்துக்கள்.....

    Reply : 0       0

    J.M. Azhar Sunday, 31 July 2011 02:01 AM

    மிகவும் சிறப்பான திட்டம். நாடு புராகவும் செயற்படுத்தப்பட வேண்டும். எல்லா நாட்களுக்கும் பொருந்தும் விஸேடமாக ரமழானில் மிகப் பொருத்தம். என்றும் எமது பிராத்தணைகள். சிறப்பாக முயற்சி நிறைவேற. தொடர்பு பட்டுள்ள தொண்டர்களுக்கும் இறைவன் நற்கூலி அளிப்பானாக. இறைவன் நமது எண்ணங்களைப் பொருந்திக் கொள்ளட்டும்.

    Reply : 0       0

    saji mohamed Sunday, 31 July 2011 02:32 AM

    மாஷா அல்லாஹ் ,

    Reply : 0       0

    MIYAD Sunday, 31 July 2011 09:16 PM

    நல்லவிடயம், வெவ்வேறு இடங்களில் சமைக்கப்படுவதால் பெரிய அளவிலான Food Poison ற்கான chance மிகக் குறைவாகவே உள்ளது. இது சிற்றுண்டிகளுக்கு மிகப் பொருந்தும்.

    Reply : 0       0

    MA Thursday, 04 August 2011 11:47 PM

    மிகவும் நல்ல முயற்சி. ராமழானோடு நின்று விடாமல் தொடர்ந்து செய்யுங்கள். இதனை மேலும் உடைகளுக்கும் விஸ்தரிக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .