2025 ஜூன் 23, திங்கட்கிழமை

2012 - முஸ்லிம் எய்ட் தினத்தை முன்னிட்டு டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

Super User   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


"2012 - முஸ்லிம் எய்ட் தினத்தை" முன்னிட்டு இன்று புதன்கிழமை கொழும்பு ஹமீட் அல் - ஹுசைனி கல்லூரியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கில் கொழும்பின் பல பாகங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த கருத்தரங்கு நாளை வியாழக்கிழமையும் கொழும்பு ஹமீட் அல் - ஹுசைனி கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்து முஸ்லிம் எய்ட் இலங்கை அலுவலகம் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது.

சர்வதேச மனிதநேய, நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமாக முஸ்லிம் எய்ட்  ஐக்கிய இராச்சியத்தில் தலைமையத்தைக் கொண்டு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தில் "முஸ்லிம் எய்ட் தின" நிகழ்வினை மனித நேய அடிப்படையிலான வெவ்வேறு தொனிப்பொருளின் கீழ் கொண்டாடி வருகின்றது. 2012ம் ஆண்டு முஸ்லிம் எய்ட் தினத்தின் தொனிபொருள் "ஆரோக்கியம் பேண நிதியிடுவோம்: மேம்படுத்தல், வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வாய்ப்பளித்தல்" என்பதாக அமைகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .