2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இரத்மலானை இந்துக் கல்லூரியின் தற்காலிக அதிபரை நிரந்தரமாக்க கோரவில்லை: நீலகண்டன்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 06 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரத்மலானை இந்துக் கல்லூரியில் தற்காலிக அதிபராக இயங்கும் திருமதி மன்மதராஜனை நிரந்தர அதிபராக நியமிக்க இந்து வித்தியா விருத்திச் சங்கம் வேண்டுகோள் விடுத்ததாகப் பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று மேற்படி சங்கத்தின் செயலாளரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளருமான கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி, இந்து வித்தியாவிருத்திச் சங்கத்தினால் கட்டப்பட்டது. இப்பாடசாலையை அரசாங்கம் சுவீகரித்த போது சுவீகரிப்புக் கட்டளை 1001இல் இக்கல்லூரியின் அதிபரை நிறுவனரான இச்சங்கத்தின் ஒப்புதலுடன் தான் நியமிப்போம் என அன்றைய கல்வியமைச்சர் கையொப்பமிட்டு அரசாங்கப் பாடசாலையான அன்றைய கல்வியமைச்சர் கையொப்பமிட்டே அரசாங்கப் பாடசாலையாக இப்பாடசாலை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இப்பாடசாலையின் சட்டப்படி இந்து மாணவர்களின் விகிதாசாரத்தையும் மாற்ற முடியாது. ஒரு பொருத்தமான தகுதியான அதிபரை நியமிக்குமாறு நாங்கள் மேல்மாகாண ஆளுநரையும் கல்வி அமைச்சரையும் வேண்டியுள்ளோம்.

தற்காலிக அதிபராக இயங்கும் திருமதி மன்மதராஜனை நிரந்தர அதிபராக நியமிக்க இச்சங்கம் வேண்டுகோள் விடுத்ததாகப் பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.

அதிபர் பதவிக்கு விண்ணப்பிப்பவரின் தகுதியைப் பொறுத்தே நாங்கள் தீர்மானம் எடுப்போம். 1996இல் இக்கல்லூரியை மீண்டும் எமது பிள்ளைகளுக்காக எடுத்து அங்கு அகில இலங்கை இந்து மாமன்றம் நடத்தும் இலவச விடுதிக்கு நாங்களும் ஆதரவு கொடுத்து வருகின்றோம். இப்பாடசாலையின் விடுதி தொடர்ந்தும் சிறப்பாக இயங்க வேண்டும்.

அதிபர் நியமனம் சம்பந்தமாக ஒரு சிலர் பாடசாலையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முயற்சிப்பதும் அதில் அரசியல்வாதிகள் பங்குபற்ற முற்படுவதையும் நாங்கள் வரவேற்க முடியாது. தயவு செய்து கவனமாக ஆராய்ந்து தீர்மான எடுக்கப்பட வேண்டிய விடயம் இது.

அதிபராக வர விரும்பும் தகுதிவாய்ந்தவர் தனது தகைமை பற்றி எங்களுக்கு அறியத்தரலாம். எவரையும் ஆதரிக்கும் அரசியல்வாதிகள் தங்கள் விதந்துரைப்புகளை எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

பாடசாலையில் எந்தவித ஆர்ப்பாட்டங்களில் அதிபர் பதவியை நாடும் எவரும் தூண்டுவதையும் அரசியல்வாதிகள் பாடசாலை நிர்வாகத்தில் அல்லது பாடசாலையில் எவரும் செய்ய முற்படும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையோ நாங்கள் அங்கீகரிக்க முடியாது.

பல கனவான்களின் கனவில் உருவான இக்கல்விக்கூடம், பலரின் தியாகசேவையால் கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகிறது. அப்புனிதத்தை எவரும் மாசுபடுத்தக் கூடாது' என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Pathikapatta aasiriyai Saturday, 07 January 2012 03:02 AM

    அரசியல் வாதிகளின் தலையிடுகளை அனுமதிக்க முடியாதென உறுதியாக கூறும் இவர், திரு. மன்மதராஜன் அதிபராக இருந்த காலத்தில் நடத்தியிருந்த அரசியல் கலாசாரம் குறித்து அப்போது ஏன் கவனம் செலுத்தவில்லை? அப்போது இந்து வித்தியாவிருத்திச் சங்கம் தூங்கிக் கொண்டா இருந்தது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .