2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் பியசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Super User   / 2012 ஜனவரி 09 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகேவிற்கு எதிராக 'பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தினர்' இன்று திங்கட்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை கையளித்தனர்.

உறவினரின் மகனொருவரை பாடசாலையில் அனுமதிப்பதற்காக குறித்த பாடசாலையின் அதிபருக்கு 150,000 ரூபாய் இலஞ்சம் வழங்கியதாக சிரேஷ்ட அமைச்சர் வார இறுதி பத்திரிகையொன்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றமாகும் என தெரிவித்து, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தினர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். படங்கள்: வருண வன்னியாராச்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .