Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 ஜனவரி 13 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை அங்கத்தவரான அஸாத் சாலி, தமிழ் மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையின் பிரதி எதிர்க்கட்சித் தலைவராக மொஹமட் மஹ்ரூப் பை மிலிந்த மொரகொட நியமித்தமைக்கு ஆட்சேபம் தெரிவித்தே தான் ராஜினாமா செய்யவுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள சபையின் மாதாந்த அமர்வில் விசேட உரையொன்றை நிகழ்த்திவிட்டு ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாகவும் ஆஸாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை அஸாத் சாலி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
fahad Saturday, 14 January 2012 05:26 AM
பாவம் சாலி காக்கா நின்ற கொப்புமில்ல புடிச்ச கொப்புமில்ல...
Reply : 0 0
meenavan Saturday, 14 January 2012 05:58 AM
அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கவேண்டாம், ஜனாதிபதிக்கு நீங்க அவசியம் தேவை.
Reply : 0 0
jeyarajah Saturday, 14 January 2012 12:41 PM
ஆம் ஆம் நினைத்த அளவு உங்கே மதிப்பும் இல்லை வருமானமும் இல்லை. வியாபாரத்தைப் பார்த்தால் நாலு காசு சம்பாதிக்கலாம்.
Reply : 0 0
Rasheed Saturday, 14 January 2012 04:57 PM
சாலி யார் ? கட்சி தாவும் உங்களைப் போன்றவர்களுக்கு இதுதான் நடக்கும்.
Reply : 0 0
sarifkana Saturday, 14 January 2012 05:32 PM
very good
Reply : 0 0
Mohamed Arshath Saturday, 14 January 2012 07:11 PM
மக்களின் தீர்ப்புதான் கடந்த பொது தேர்தலில் தெரிந்து விட்டதே.. நீங்கள்தான் தெரிந்து கொள்ளவில்லை...
Reply : 0 0
senaiyuraan Saturday, 14 January 2012 07:21 PM
சாலி காக்க நல்லா ஒன்றுக்கு மூன்று தடவை சிந்தித்து முடிவு எடுங்கள். சிந்தனையை எழுதியவங்களுக்கு என்ன நடந்ததோ அதே நிலைமை உங்களும் நடக்கலாம். எதற்கும் யோசிங்க.
Reply : 0 0
SK Saturday, 14 January 2012 10:02 PM
ஊர தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சி கிட்டேன்.... :-))
Reply : 0 0
சிறாஜ் Sunday, 15 January 2012 12:34 AM
அப்படியோ முஸ்லீம் காங்கிரஸுடன் வந்து சேருங்க சாலி காக்கா அடுத்த மேயரா வரலாம்.
Reply : 0 0
suthan Sunday, 15 January 2012 03:12 AM
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே ...கண்ணதாசன் சொன்னது , அதில் அர்த்தம் உள்ளது....
Reply : 0 0
Reeath Sunday, 15 January 2012 10:29 PM
நக்குண்டார் நாவிழந்தார். கடவுளின் சாபம்
Reply : 0 0
muhammath Ranoos Tuesday, 17 January 2012 05:22 PM
கொள்கையுடன் அரசியல் செய்யுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
41 minute ago
2 hours ago