Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 ஜனவரி 19 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான முஹம்மட் மஹ்ரூப் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முப்தி முஹ்சின் கூறியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றபோதே, மாநகர சபை உறுப்பினர் முப்தி முஹ்சின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழுவிற்கான ஆதிக்கத்தை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியதையடுத்து குழப்ப நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சில நிமிடங்கள் இக்கூட்டத்தினை மேயர் முஸம்மில் ஒத்திவைத்தார்.
மீண்டும் கூட்டம் ஆரம்பமாகிய போது, ஐக்கிய தேசிய கட்சியின் சில உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களான பிரேமஜயந்த கஸ்துரியாராச்சி மற்றும் சுனில் விதானகே ஆகியோர் தெரிவி;த்தனர்.
ஆதரவாக வாக்களித்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு 200,000 ரூபா பணம் வழங்குவதுடன் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுப்புவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாக்குறுதியளித்துள்ளதாக மாநகர சபை உறுப்பினர் சுனில் விதானகே குறிப்பிட்டார்.
இதனையடுத்து, நிதிக்குழுவுக்கு மீண்டும் தேர்தல் நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் நிதிக் குழுவை கைப்பற்றுவதற்கு காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஹம்மட் ரஸ்மி தெரிவித்தார்.
நிதிக் குழுவிற்கு மாநகர சபை உறுப்பினர் ஆஸாத் சாலியின் பெயர் மேயரினால் முன்மொழியப்பட்டமையே அதிக உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோய் போகவத்த குறிப்பிட்டார்.
மாநகர கட்டளை சட்டத்திற்கிணங்க நிதிக் குழு உட்பட அனைத்து நிலையியற் குழுக்களும் ஒரு வருடத்திற்கே செல்லுபடியாகும்.
இதேவேளை, ஏனைய மூன்று குழுக்களுக்குமான அதிகாரத்தினை ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன இணைந்து கைப்பற்றின.
மேயர் முஸம்மில் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்தே இந்த இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
1 hours ago