Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொது உறவு பகுதியின் ஏற்பாட்டில் சிங்கள மொழி மூல அல்குர்ஆன் விளக்கவுரை (தப்ஹீமுல் குர்ஆன்) வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் டி.எம். ஜயரத்ன கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜயன்த செனவிரத்னவும் சிறப்புப் பேச்சாளராக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியும் உரை நிகழ்த்தவுள்ளனர்.
இதேவேளை, சிங்கள மொழியிலான தப்ஹீமுல் குர்ஆன் வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊடக மற்றும் பொது உறவு பகுதியினால் 'அல்குர்ஆன் விளக்கவுரையில் ஒரு மைல்கல்: இலங்கை முஸ்லிம்களின் காத்திரமான பங்களிப்பு' எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட கட்டுரையின் முழுமை
'அல்குர்ஆன் விளக்கவுரையில் ஒரு மைல்கல்: இலங்கை முஸ்லிம்களின் காத்திரமான பங்களிப்பு'
உலகில் பின்பற்றப்படும் பிரதான மதங்களுள் இஸ்லாமும் ஒன்று. இந்தோனேஷியா முதல் மொரோக்கோ வரை முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பா, அமெரிக்கா உட்பட ஏனைய கண்டங்களில் 31 கோடி முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் சுமார் 8 சதவீத முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
சர்வ வல்லமை மிக்க இறைவனே முழுப் பிரபஞ்சத்தையும் மனிதனையும் படைத்துப் பரிபாலித்து நிர்வகித்து வருகிறான்.
பூவுலகின் முதல் மனிதர் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களே. அவரது வழித்தோன்றல்களே இந்த மனித சமூகம். இந்த மனித சமூகத்தை வழிநடத்துவதற்காக வல்ல இறைவன் காலத்துக்குக் காலம் இறைதூதர்களையும் அவர்களுக்கு நேர்வழி காட்ட இறை வேதங்களையும் அனுப்பி வைத்தான்.
அத்தகைய இறைதூதர்களில் இப்றாஹீம், மூஸா, தாவூத், ஸுலைமான், இப்றாஹீம், இஸ்மாஈல், மூஸா, ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தௌராத், இன்ஜீல், ஸபூர் ஆகிய வேதங்களை அல்லாஹ் இறைதூதர்கள் மூலம் மக்களுக்கு அருளினான். இதன் தொடரில் இறுதி வேதமாக அல்குர்ஆனை அருளிய அல்லாஹுத் தஆலா, இதனை மக்களுக்கு எத்திவைப்பதற்கு ஒரு தூதரையும் தேர்ந்தெடுத்தான்.
அவர்தான் இறுதி வேதமாகிய அல்குர்ஆனைச் சுமந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களது நாற்பதாவது வயதில் அல்குர்ஆனின் முதல் ஐந்து வசனங்கள் அருளப்பட்டன. அது முதல் அவர் மரணிக்கும் வரையிலான 23 வருட காலப் பகுதிக்குள் அல்குர்ஆனிலுள்ள 6,666 வசனங்களும் பகுதி பகுதியான இறக்கியருளப்பட்டன.
அவரது காலப் பகுதியிலேயே அல்குர்ஆன் நபித் தோழர்களின் உள்ளங்களிலும் கையெழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்டது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீபா அபூ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது ஆட்சிக் காலத்தில் அல்குர்ஆன் முழுமையாகத் தொகுக்கப்பட்டது.
மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தொகுக்கப்பட்ட அல்குர்ஆனை நூலுருப்படுத்தும் மகத்தான பணியை கச்சிதமாக நிறைவேற்றினார்கள். மட்டுமன்றி, அல்குர்ஆன் பிரதிகளை உலகின் பல பாகங்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அல்குர்ஆன் பிரதிகளுள் ஒன்று இன்னும் ரஷ்யாவின் ஷலெனின் கிரேட்| அரும்பொருட் காட்சிசாலையில் பாதுகாப்பாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அல்குர்ஆன் மொழியில் உயர்ந்த இலக்கியமாகவும் அரபு மொழியின் இலக்கண, இலக்கிய சட்டங்களுக்கு அடிப்படையாகவும் திகழ்கிறது. அல்குர்ஆன் இறைவனைப் பற்றியும் அவனது வல்லமை, சக்தி மற்றும் மனிதன், அவன் வாழும் பிரபஞ்சம், அதன் முடிவு, மனிதனின் மரணத்திற்குப் பின்னரான வாழ்வு பற்றிப் பேசுவதுடன் குடும்ப வாழ்வு, பொருளாதாரம், சமூக வாழ்வு, அரசியல், புவியியல், வானவியல், மனிதப் பண்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள் பற்றியும் பேசுகிறது. அல்குர்ஆனிய வசனங்கள் சொற்சுருக்கமும் பொருட் செறிவுமுடையதாக அமைந்திருப்பது அதன் சிறப்பியல்புகளுள் ஒன்று.
அல்குர்ஆனியப் போதனைகளின் அடிப்படையில் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின் மத்திய காலத்தில் படிப்படியாக ஒரு பெரும் இஸ்லாமிய நாகரிகம் கட்டியெழுப்பப்பட்டது.
அதன் அறிவியல், விஞ்ஞான, மருத்துவ மற்றும் இன்னோரன்ன கலைகளின் வளர்ச்சிக்கு அல்குர்ஆன் அத்திபாரமாகத் திகழ்ந்தது. அதன் உன்னத வழிகாட்டல்கள் மூலம் மனித சமூகம் எதர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சிகள் முஸ்லிம் உலகில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அதன் நித்திய, சத்திய தன்மைக்குச் சான்று.
இதற்கு சிறந்த உதாரணமாக, இன்றைய உலகை ஆட்டிப்படைக்கும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியாக வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கிமுறையைக் குறிப்பிட முடியும். எமது நாட்டிலும் அதற்கான சமிக்ஞைகள், குறிகாட்டிகள் தென்படுகின்றன.
புனித அல்குர்ஆனுக்கு வரலாறு நெடுகிலும் ஆயிரக்கணக்கான அறிஞர்கள் விளக்கவுரைகளை எழுதியுள்ளனர். அந்த வகையில் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட அல்குர்ஆன் விரிவுரைகளில் ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது தப்ஹீமுல் குர்ஆனும் அஷ்ஷஹீத் ஸய்யித் குதுப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் எழுதப்பட்ட ஷஷபீ ழிலாலில் குர்ஆன் (அல்குர்ஆனின் நிழலில்) எனும் அல்குர்ஆன் விளக்கவுரையும் முக்கியமானவை.
மாறிவரும் நவீன கால சிக்கல் நிறைந்த மனித வாழ்வுக்கு அல்குர்ஆனியப் போதனைகளிலிருந்து வழிகாட்டல்கள் வழங்கும் நோக்கில் எழுதப்பட்ட விளக்கவுரையே தப்ஹீமுல் குர்ஆன்.
1903இல் தென் இந்தியாவில் பிறந்த ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் ஸ்தாபகரான மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சுமார் 30 வருட கால தேடல், ஆய்வின் மூலம் உருது மொழியில் ஆறு பாகங்களைக் கொண்ட தப்ஹீமுல் குர்ஆனை எழுதினார்கள். இன்று உலகின் பல்வேறு பிரதான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரையை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது.
தப்ஹீமுல் குர்ஆனின் 6 பாகங்களினதும் சிங்கள மொழிபெயர்ப்பு 4050 பக்கங்களில் 12 பாகங்களாக வெளிவந்துள்ளது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்டுள்ள இந்த அல்குர்ஆன் விரிவுரை, சிங்கள மொழியில் வெளிவந்துள்ள முதலாவது தப்ஸீர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள மொழியில் கல்வி கற்ற முஸ்லிம்களும் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களும் உலக மாந்தருக்கு வழிகாட்டியாக அருளப்பட்ட அல்குர்ஆனின் போதனைகளை, வழிகாட்டல்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரையை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி சிங்கள மொழிக்கு பெயர்த்ததன் நோக்கங்களுள் ஒன்றாகும்.
1989ஆம் ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமியினால் வெளியிடப்பட்ட தப்ஹீமுல் குர்ஆனின் ஸூரதுல் பாதிஹா, அல்பகரா ஆகிய இரண்டு ஸூராக்களும் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.
frf, saudi arabia Wednesday, 15 February 2012 07:46 PM
அல்ஹ்ம்துல்லில்லாஹ்... நல்ல விடயம்... உங்கள் பனி தொடரட்டும்... ஆமின்.
Reply : 0 0
musthaq Thursday, 16 February 2012 04:18 AM
masha allah .
SRILANKA JAMATH E ISLAMI
WELLCOME...
Reply : 0 0
Abdul Salam Thursday, 16 February 2012 12:37 PM
நான் நீண்டநாட்கள் எதிர்பார்த்த விடயம் உரியவர்களுக்கு பாராட்டுக்கள் .
Reply : 0 0
ummpa Thursday, 16 February 2012 02:06 PM
அல்ஹம்துலில்லாஹ், இதனுடன் நிறுத்திவிடாமல் இப்னு காசிர் அவர்களின் தமிழ் விளக்கவுரை மிகவும் விளக்கமானது. அதனையும் சிங்கள மொழிக்கு உட்படுத்தினால் மிகவும் இலகுவாக இருக்கும்.
Reply : 0 0
nijam Thursday, 16 February 2012 04:29 PM
எமது நாட்டின் முக்கியமான தேவைகளில் ஒன்று நிறைவேறுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்
Reply : 0 0
Sajan Latheef Thursday, 16 February 2012 05:54 PM
Great job, This is will be a another milestone in SLJI Da'wa activities. Allah may bless who worked hard for this.
Reply : 0 0
naalir Thursday, 16 February 2012 07:33 PM
எமது நாட்டின் முக்கியமான தேவைகளில் ஒன்று நிறைவேறுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
Reply : 0 0
Arqam Muneer Saturday, 18 February 2012 02:45 AM
அல்ஹம்துலில்லாஹ்! ஸ்ரீ லங்கா ஜமாஅத் ஈ இஸ்லாமியின் பணிகள் தொடர வாழ்த்துக்கள்! சிங்களத்தை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு இது ஒரு பொன் நாள்!
Reply : 0 0
a.r.m.asbar Saturday, 18 February 2012 11:41 PM
மாஷா அல்லா திஸ் இஸ் எ வெரி குட் சர்வீஸ்.. மே அல்லா ப்ளேசஸ் ஆல் ஒப் அஸ்.
Reply : 0 0
Mohammed Iyoob Tuesday, 11 December 2012 05:37 PM
அல்ஹ்ம்த்துலிலா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
45 minute ago
2 hours ago