2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் மல்வானை அல் - முபாரக் தேசிய பாடசாலை அதிபர் கைது

Super User   / 2012 மார்ச் 13 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.எம்.பௌஸான்)

மல்வானை அல் - முபாரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.ஜே.எம்.இல்யாஸ் இன்று செவ்வாய்க்கிழமை காலை பியகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

நிதி மோசடியில் ஈடுபட்டார் என்றார் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட பிடியாணைக்கிணங்கவே இவரை கைது செய்ததாக பியகம பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கீர்த்திசிங்க தெரிவித்தார்.

அதிபரின் கைதினால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பாடசாலைக்கு முன்னாள் டயர்கள் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிபரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எந்தவித குற்றமும் செய்யாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அதிபரை உடனடியாக விடுதலை செய்யப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடுவது என தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவம் இடத்திற்கு பியகம, களனி, கிரிபத்கொட, சபுகஸ்கந்த மற்றும் பேலியகொட போன்ற பொலிஸ் நிலையங்களில் இருந்து பெருமளவிலான பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் களனி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்தளத்திற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ் அத்தியட்சகர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, அதிபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன இணைந்து பொலிஸ் அத்தியட்சகரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அதிபரை விடுதலை செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் அதிபர் ஏ.ஜே.எம்.இல்யாஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தினால் குறித்த பகுதிக்கான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0

  • Dr.M.Inamullah PhD Wednesday, 14 March 2012 03:01 PM

    மல்வானை மக்களுக்கு நன்றி : ஹப்புகஸ்தலாவையை சேர்ந்த இல்யாஸ் ஆசிரியர் அல்-முபாரக் தேசிய பாடசாலை அபிவிருத்தியில் அதிக ஆர்வம் காட்டுபவர் எனது ஆசானும் கூட, குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாவிடின் அவர் பியகம போலிசுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

    " அதிபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன இணைந்து பொலிஸ் அத்தியட்சகரிடம் தெரிவித்தனர்."

    Reply : 0       0

    M Mafahir Thursday, 15 March 2012 08:04 AM

    we know ur true & clean.
    Allah may give u strenth & long life.
    im proud of u my dear sacha!
    thanks a lot for Malwana students & people...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .