2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அமைச்சர் றிசாட் - ஜோர்டான் தூதுவர் சந்திப்பு

Super User   / 2012 மார்ச் 14 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான ஜோர்டான் தூதுவர் முஹம்மட் ஸராரி எல் பகதீ எல் பயாஸ் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீனை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.

கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சமகால அரசியல், கலாசாரம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து செயற்படும் இலங்கைக்கான ஜோர்டான் தூதுவர், தனது நியமன கடிதத்தை கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X