2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக சிகரெட் வைத்திருந்த குற்றச்சாட்டு: சீனப் பெண்ணுக்கு அபராதம்

Super User   / 2012 மார்ச் 15 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(லக்மால் சூரியகொட)

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் 10 இற்கும் மேற்பட்ட சிகரெட் பக்கற்றுகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சீனப் பெண்ணொருவருக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் 150,000 ரூபா அபராதம் விதித்தது.

யான் சூ ஜுன் எனும் இப்பெண் கொள்ளுபிட்டி டீன்ஸ்டன் பிளேஸிலுள்ள வணிக நிலையமொன்றிலிருந்து கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். எனினும் இச்சிகரெட்டுகளை  சுமத்தப்பட்டவர் தனது சொந்தப் பாவனைக்காகவே வைத்திருந்தார் என அவரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார். இறுதியில் நீதிவான் கனிஷ்க விஜேரட்ன 150,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .