2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பில் கைவிடப்பட்ட சிசுவை காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவு

Menaka Mookandi   / 2012 மே 18 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு - மூன்றாம் குறுக்குத் தெருவில் வீதியோரத்தில் கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட பிறந்து 10 நாட்களேயான சிசுவை பாணந்துறையில் உள்ள குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

மூன்றாம் குறுக்குத் தெருவில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை இந்த ஆண் குழந்தை கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவக உரிமையாளரே இரவு 9.30 மணியளவில் குழந்தையை வீதியோரத்தில் கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் குழந்தையை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதே, குழந்தையை பரிவாச அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் பாணந்துறையில் உள்ள பிரஜா கோதமி குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்குமாறு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி.அமரசிங்க உத்தரவிட்டார்.

இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .