2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வேறு நபரின் வங்கி அட்டையை பயன்படுத்தி மோசடியாக பணத்தை பெற்ற மூவருக்கு விளக்கமறியல்

Super User   / 2012 மே 20 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

வாடிக்கையாளர் ஒருவரால் வங்கியில் தவறவிடப்பட்ட கடன் அட்டையை பயன்படுத்தி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிரவரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.ப.அமரசிங்க நேற்று சனிக்கிழமை உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் மூவரும் நீர்கொழும்பு - போலவலான பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வங்கி அட்டையை பயன்படுத்தி பல இலட்சம் ருபா பணத்தை மோசடியாக பெற்றுள்ளனர்.

வழக்கின் முறைப்பாட்டாளர் கடந்த 9ஆம் திகதி நீர்கொழும்பில் உள்ள தனியார் வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு செல்லும் போதுஇ அவரது வங்கி அட்டையையும் வங்கி அட்டையின் இரகசிய குறியீடு எழுதப்பட்ட காகிதத்தையும் தவறவிட்டுள்ளார்.

இதனை சந்தேகநபர்களில் இருவர் கண்டுள்ளதோடு வங்கி அட்டையை பயன்படுத்தி 80,000 ரூபா பணத்தையும் முதலில் பெற்றுள்ளனர். பின்னர் மூன்றாவது சந்தேக நபரான மஹவௌ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுடன் இணைந்து 375,000 ரூபா பணத்தை பெற்று மூவருமாக பணத்தை பகிர்ந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் முறைப்பாட்டாளர் சில தினங்கள் கடந்து தனது வங்கி அட்டை காணாமல் போனதை அறிந்து கொண்டதன் பின்னர்இ நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்துஇ வங்கியின் இரகசிய கமராவை பரிசீத்த பொலிஸார் நகரில் உள்ள கடைகளில் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

இதன் போது சந்தேக நபர்கள் தொடர்பான தகவல் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட லெப்டொப்இ பிளென்டர்இ சோபாசெட் என்பவற்றையும் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .