2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வர்த்தகரின் கொலை தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் கைது

Super User   / 2012 மே 22 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                 (சுபுன் டயஸ்)

புத்தளம் ஆனமடுவவில் இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை தொடர்பாக மேல் மாகாண சபையின் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினரான துஷாரா பெரேராவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

வத்தளையில் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட வர்த்தகருடன் இணைந்து இம்மாகாண சபை உறுப்பினர் வர்த்தகமொன்றில் ஈடுபட்டார்.  இவர்கள் நீரிழிவு நோய்க்காக பயன்படுத்தப்படும் சுதேச மருந்தொன்றை ஏற்றுமதி செய்தனர்.

இவ்வர்த்தகருடன் ஏற்பட்ட மோதலையடுத்து அவரை கொலை செய்வதற்காக இராணுவத்திலிருந்து தப்பிவந்த மூவரை சந்தேக நபர் நியமித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கொலையின் பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், மேற்படி அரசியல்வாதியின் தொடர்பை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேற்படி மாகாண சபை உறுப்பினரை புத்தளம் நீதவான் முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆஜர்படுத்தவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .