2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தமிழ் கைதிகளின் விடுதலை மூலமே அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உலகறிய செய்யலாம்: குமரகுர

Super User   / 2012 மே 22 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசிற்கும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு மனிதாபிமானத்தின் பெயரால் அறைகூவல் விடுக்கின்றது என அக்கட்சியின் பொது செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அரசிற்கு யுத்தத்தின் பின்னரான ஜனநாயக பாதை இருக்குமானால் மனித உரிமைகளுக்கு  மதிப்பு அளிப்பதை நல்லிணக்க ஆணைக்குழுவின்  பரிந்துரையின் நடைமுறைக்கான முதற் படியாக தமிழ்  கைதிகளின் விடுதலையே அமைய முடியும்.

தமிழ் கைதிகளின் விடுதலை மூலமே அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உலகறிய செய்யலாம். சரத் பொன்சேகாவின் விடுதலைக்கும் அதன் பின்னணியில் இருந்த பொறிமுறைக்கும் இராஜதந்திர அழுத்தங்களுக்கும் அதன்பாலான அவரின் விடுதலையும் முற்றிலும் வேறுபட்டதொன்றாகும்.

இது ஒருபொழுதும் தனியே நல்லாட்சியை  எடுத்துக் காட்டியதான அர்த்தத்தை வியாக்கியானத்தை கொடுக்க முடியாது தமிழ் கைதிகள் இன்னமும் விளக்கமறியலில் வருடக்கணக்காக வெதும்பி இருக்க மேலும் எத்தனை  வருடங்கள்  என அறியாது வாழ்வின் இளமை பராயத்தையே தொலைத்து நிற்கின்றனர்.

தாய்மார் பிள்ளைகள் வேறு சட்டரீதியான மனு நீதிகளுகேல்லாம் அப்பால் முடிவு எப்படியிருக்கும் என்று அறியாது இது வேறு உளவியல் தாக்கமாகும். அரசிற்கும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு மனிதாபிமானத்தின் பெயரால் அறைகூவல் விடுக்கின்றது  .

இவர்கள்  விடுதலைக்காக  நடுநிலை அனுசரனையாளர்களாக ஜனாதிபதியுடன் பேச வேண்டுமாயின் மனிதாபிமானத்தின் பெயரால் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமை பரிசீலிக்கும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .