2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தெஹிவளை, கல் விகாரை பள்ளிவாசலை சமய பாடசாலையாக மட்டும் பயன்படுத்த இணக்கம்?

Super User   / 2012 மே 28 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

தெஹிவளை, கல் விகாரை வீதியிலுள்ள பள்ளிவாசல் சமய பாடசாலையாக மாத்திரமே செயற்பட முடியும் என இணக்கம் காணப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

அத்துடன், குறித்த பள்ளிவாசலினுள் ஐவேளை தொழுகை நடத்தப்பட கூடாது எனவும் அவ்வாறு ஐவேளை தொழுகை நடத்துவது என்றால் நீதிமன்ற அனுமதியை பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தலமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெஹிவளை – கல்கிஸை மாநகர சபையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பௌத்த தேரர்கள், மௌலவிமார்கள் மற்றும் குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். எனினும், ஊடகவியலாளர்கள் இக்கூட்டத்தை பார்வஇயிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

குறித்த பள்ளிவாசல் சமய பாடசாலையாக மாத்திரமே செயற்பட முடியும். அத்துடன் குறித்த சமய பாடசாலை மாணவர்கள் மாத்திரம் தொழுகை நடவடிக்கையில் ஈடுபட முடியும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் இப்பள்ளிவாசலினுள் தொழுகை நடவடிக்கையில் ஈடுபட முடியாது. அவ்வாறு ஐவேளை தொழுகை நடத்துவது என்றால் நீதிமன்ற அனுமதியை பெற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளிவாசல் தொடர்பிலான வழக்கொன்றினை தெஹிவளை பொலிஸார் கல்கிஸை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

அத்துடன் குறித்த பள்ளிவாசல் மாறுகள் அறுக்கப்படும் நிலையமாக பயன்படுத்தப்படுவதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பௌத்த தேரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும், குறித்த குற்றத்தினை இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்.

இப்பள்ளிவாசலினை நிர்வகிக்கும் ஜம்இயது ஷபாப் எனப்படும் முஸ்லிம் இளைஞர்கள் செய்லான் கூட்டமைப்பின் பிரதி பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் பிரதி பொது செயலாளருமான மௌவலி எம்.எஸ்.எம்.தாசீமை தமிழ்மிரர் இணையத்தளம் பலமுறை தொடர்புகொண்ட போது, குறித்த பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.  

You May Also Like

  Comments - 0

  • miskeen Monday, 28 May 2012 11:09 AM

    மத வழிபாட்டுரிமை முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகின்றது..

    Reply : 0       0

    Rinos Tuesday, 29 May 2012 05:54 AM

    THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA--
    CHAPTER III - FUNDAMENTAL RIGHTS--
    Freedom of thought, conscience and religion.
    10. Every person is entitled to freedom of thought, conscience and religion, including the freedom to have or to adopt a religion or belief of his choice.

    இப்போ இது நடைமுறையில் இருக்கா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .