2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

''வேர் அறுதலின் வலி'' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

Super User   / 2012 மே 28 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் வெளியிடப்படவுள்ள ''வேர் அறுதலின் வலி'' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு இல.201 டீ.ஆர்.விஜயவர்த்தனா மாவத்தை கொழும்பு 10 உள்ள முஸ்லிம் மாதர் நிலையத்தில் நடைபெறவுள்ளது.
 
நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவருமான என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் கைத்தொழில் முதலீட்டு அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீனும் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
இதேவேளை, சிறப்பு அதிதிகளாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் கிண்ணியா அமீர் அலி நிகழ்வுகளை தொகுத்தளிக்கவுள்ளார். அத்துடன் கவிஞர் யாழ் அஸீம் கவி வாழ்த்துரைப்பார்.  இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை யாழ் முஸ்லிம் இணையம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 
இந்நிகழ்வில் விருது பெறும் மூத்த இலக்கிய படைப்பாளிகள்

 
1.    கவிமணி மௌலவி புஹாரி - காத்தான்குடி
2.    கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹுர்கனி - மாபோல
3.    ஏ.எல்.எம். சத்தார் – பாணந்துறை
4.    ரீ.எல். ஜவ்பர்கான் – காத்தான்குடி
5.    கவிஞர் ஜன்ஸி கபூர் – அநுராதபுரம்
6.    ஏ.எஸ். இப்ராஹீம் கலைமேகம் – மூதூர்
7.    கவிமணி நீலா பாலன் – வெலிமடை
8.    ஏ.எம்.எம். அலி – கிண்ணியா
9.    நவாலியூர்க் கவிராயர் – யாழ்ப்பாணம்
10.    கலாபூஷனம் அப்துல் லத்தீப் – புத்தளம்
11.    கலாபூஷனம் கே.எம்.ஏ.அஸீஸ் - சாய்ந்தமருது
 
இந்நிகழ்வில் சிறப்பு விருது பெறும் மூத்த படைப்பாளிகள்
 
1. கலாபூஷணம் கவிஞர் யாழ் அஸீம்
2. கலைவாதி கலீல்
3. முல்லை முஸ்ரிபா

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .