2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மேயர் முஸம்மிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

Super User   / 2012 மே 29 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                      (யொஹான் பெரேரா)

கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

முஸ்லிம் எம்.பிகள் சிலரை மேயர் முஸம்மில் தம்புள்ளை ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்று இஸ்லாமிய கலாசாரத்திற்கு விரோதமான செயல்களை செய்வதற்கு ஊக்குவித்ததாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான மொஹமட் மஹ்ரூப் குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக மேயர் முஸம்மில் கருத்துத் தெரிவிக்கையில்,  தனக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முயற்சிப்பதன் மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புரளி ஏற்படுத்த முனைவதாக கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பிளவேற்பட்டுள்ளமையாலேயே நம்பிக்கையில்லா பிரேணையை கொண்டுவர அவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
'அவர்களிடையே பிளவேற்பட்டுள்ளமைக்கு என்னை குற்றம் சுமத்துகிறார்கள்' என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • Jr Tuesday, 29 May 2012 09:37 AM

    என்ன செய்ய சொன்னார். வெலாவாரியாக சொல்லவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .