2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஈரான் வெளிவிவகார பிரதி அமைச்சர் – அமைச்சர் றிசாட் சந்திப்பு

Super User   / 2012 மே 29 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஈரான் நாட்டின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான பிரதி வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீனை இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையிலிருந்து ஈரானுக்கு தேயிலையினை நேரடியாக இறக்குமதி செய்த போதும் இன்னும் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக ஈரான் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையின் உட்கட்டமைப்பு செயற்பாடுகளுக்கு ஈரான் தமது பங்களிப்பை வழங்க எண்ணியுள்ளதாகவும் ஈரானிய பிரதி அமைச்சர் இச்சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை மேலும் வலுப்படுத்த பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை இரு தரப்பினரும் தமது கலந்துரையாடல்களின் போது பகிரந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .