2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்பு மேயரின் ஊழலை நிரூபிப்பேன்: மஹரூவ்

Super User   / 2012 மே 30 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                        (ஹபீல் பரீஸ்)

கொழும்பு மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே பிளவேற்படுத்தியமைக்காக மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவர்  மொஹமட் மஹரூவ் கூறினார்.

'எதிர்க்கட்சித் தலைவராக நான் பதவி வகிப்பதற்கு ஐ.ம.சு. கூட்டமைப்பு உறுப்பினர்கள் 19 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். மாநகர சபையின் சில விதிகளை மீறியமைக்காக  மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளோம். மேயர் ஊழல் புரிந்தவர். அதற்கு என்னிடம் ஆதரமுள்ளது' என அவர்கூறினார்.  உரிய காலத்தில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் எனவும்  அவர் தெரிவித்தார்.

"ஐ.ம.சு.கூட்டமைப்பு குழுவினரிடையே பிளவுகள் இல்லை. எதிர்க்கட்சித்தலைவராக மொறகொட பதவி வகித்தபோது. ஆஸாத் சாலி எனும் உறுப்பினர் தன்போக்கில் செயற்பட முனனைந்தார். எனவே நாம் அவரை நீக்கத் தீர்மானித்தோம். இப்போதுள்ள 21 பேரில் 19 பேர் என்னை ஆதரிக்கின்றனர். என்னை எதிர்க்க மன்ஸில்  முனைந்தார். துரதிஷ்டவசமாக அவருக்கு செயலாளர்கூட இல்லை.

ஐ.ம.சு.கூ. குழுவின் உள்விவகாரங்களில் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலையிட முடியாது. மன்ஸில் சார்பாக தொலைக்காட்சியில் தோன்றிய மேயர் பல்வேறு விடயங்களை கூறியுள்ளார்.  இந்த அறையில் தளபாடங்களை பொருத்துமாறு நான் கூறியது உண்மை. ஆனால், அதை நான் மேயரிடம் இதை கோர விருமபவில்லை.  அவர் எனக்கு யாருமில்லை.   ஆணையாளரிடமே நான் இது குறித்து கோரினேன்" என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .