2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் சிவராம், நடேசன் நினைவுரை

Super User   / 2012 ஜூன் 03 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தர்மரெட்ணம் சிவராம், ஜயாத்துரை நடேன் ஆகியோர் தொடர்பான நினைவுரை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6மணிக்கு இடம்பெறவுள்ளது.

'தற்போதைய அரசியல் சூழலில் ஊடகத்துறையின் நிலை' என்ற தொனிப்பொருளில் சுயாதீன ஊடகவியலாளர் ரணத்குமாரசிங்க உரையாற்றவுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை வருகை விரிவுரையாளர் கே.சர்வேஸ்வரன் சிறப்புரையாற்றுவார்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வுக்கு ஒன்றியத்தின் தலைவர் ஆனந் பாலகிட்ணர் தலைமை தாங்குவார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்துகொள்வர்.
ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

ஐயாத்துரை நடேசன் 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பிலும் தர்மரட்ணம் சிவராம் 2005ஆம் ஆண்டு கொழும்பிலும் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .