2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கத்திமுனையில் தங்கச்சங்கிலி அறுக்க முற்பட்ட இருவரில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 19 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே. என்.முனாஷா )

நீர்கொழும்பு, தளுப்பத்தை பிரதேசத்தில் ஒருவரின் தங்கச்சங்கிலியை கொள்ளையிட முயன்றபோது பொதுமக்களால்  மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இருவரில் ஒருவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

வளர்ப்பு நாய்கள் விற்பனை செய்யும் தளுப்பத்தை பாலத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு நாய் வாங்குவதைப் போன்று பாசாங்கு காட்டிக்கொண்டு அவ்வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த இச்சந்தேக நபர்கள் இருவரும்  கத்திமுனையில் அவ்வீட்டு  உரிமையாளரை அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை அறுக்க முற்பட்டபோது பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான இச்சசந்தேக நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையிலேயே ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மற்றைய சந்தேக நபர்  பொலிஸாரின்  பாதுகாப்புடன்    வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான  விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .